search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சகோதரன் கொலை"

    நாகர்கோவிலில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அதிக மது கொடுத்து சகோதரனை கொன்ற சகோதரியை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மேலப் பெருவிளையைச் சேர்ந்தவர் நீலசாமி (வயது 43). திருமணம் ஆகாதவர். கல்லூரி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பின்னர் அந்த வேலையை விட்டு கூலி தொழில் செய்தார்.

    நீலசாமி அதே பகுதியில் உள்ள தனது சகோதரி அமராவதி வீட்டில் தங்கியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமான நீலசாமி, கோட்டவிளையில் உள்ள கிணற்றில் கொலை செய்யப்பட்டு பிணமாக மிதந்தார். அவரது 2 கைகளும் பின்புறம் லுங்கியால் கட்டப்பட்டு கிடந்தது.

    ஆசாரிப்பள்ளம் போலீசார் நீலசாமியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். நீலசாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடிபோதை தகராறில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். இதற்காக நீலசாமியின் நண்பர்கள், அவருடன் சேர்ந்து மது அருந்துபவர்கள் என 5-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை.

    நீலசாமி மாயமானது பற்றி அவரது சகோதரி அமராவதி, போலீஸ் நிலையத்தில் எந்தவொரு புகாரும் செய்யாமல் இருந்தார். நீலசாமி பிணம் மீட்கப்பட்டதும் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு சென்று கொலை செய்யப்பட்டவர் தனது சகோதரர் நீலசாமி தான் என அவர் அடையாளம் காட்டினார்.

    இதனால் அமராவதி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அமராவதி வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் (48) என்பவர் அடிக்கடி சென்று வந்ததும் தெரியவந்தது. அதன்பேரில் அமராவதியையும், பிரசாத்தையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அமராவதியும், பிரசாத்தும் திட்டமிட்டு நீலசாமியை கொன்று கிணற்றில் வீசியது தெரியவந்தது.

    அமராவதி கணவரை இழந்தவர். தனிமையில் இருந்த அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது. அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத்தும் அவருடன் உல்லாசமாக இருந்தார்.

    பிரசாத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த நெருங்கிய உறவுப்பெண் ஒருவருடன் முறைதவறிய உறவு இருந்துள்ளது. அந்த பெண்ணையும் பிரசாத், அமராவதி வீட்டுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார். இதற்கு அமராவதி துணையாக இருந்துள்ளார்.

    இதுதவிர அமராவதிக்கு சென்னையில் பணியாற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயில் வார்டன் ஒருவருடனும் தொடர்பு இருந்துள்ளது. அவர் ஊருக்கு வரும் சமயத்தில் அமராவதி வீட்டுக்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்தார்.

    அமராவதியின் நடத்தை சரியில்லாததை அறிந்த நீலசாமி வேதனைப்பட்டார். அமராவதியை அழைத்து பல முறை அவர் கண்டித்தார். பிரசாத்தையும் இனி வீட்டுக்கு வரக்கூடாது என சத்தம் போட்டார்.

    நீலசாமியின் கண்டிப்பால் அமராவதியும், பிரசாத்தும் அடிக்கடி சந்திக்க முடியாமல் போனது. தங்கள் கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் நீலசாமியை கொன்று விட்டால் நிம்மதியாக தங்கள் தொடர்பை தொடரலாம் என அமராவதியும், பிரசாத்தும் திட்டமிட்டனர்.

    நீலசாமி குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் அவருக்கு மது வாங்கி கொடுத்து தீர்த்துக்கட்டலாம் என அவர்கள் முடிவு செய்தனர். சம்பவத்தன்று நீலசாமிக்கு மது வாங்கி தருவதாக ஆசைக்காட்டி கோட்டவிளை பகுதிக்கு அவரை பிரசாத் அழைத்துச் சென்றார். அங்கு நீலசாமிக்கு பிரசாத் மது ஊற்றிக் கொடுத்தார். தன்னை கொல்வதற்காக பிரசாத் மதுவாங்கிக் கொடுப்பதை அறியாத நீலசாமி, அளவுக்கு அதிகமாக மது குடித்து மயக்கநிலைக்குச் சென்றார்.

    அப்போது நீலசாமியை பிரசாத் அடித்துக் கொலை செய்தார். பின்னர் நீலசாமி அணிந்திருந்த லுங்கியால் அவரது 2 கைகளையும் பின்புறமாக கட்டி கிணற்றில் வீசி விட்டி தப்பிச் சென்றுள்ளார்.

    இந்த விவரங்களை அமராவதியும், பிரசாத்தும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

    கைதான பிரசாத்துக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
    ×